திருநெல்வேலியில் உள்ள பல்வேறு நூலகங்களில் அனைத்து வார, மாத இதழ்கள் கடைகளுக்கு வந்து பல நாள்கள் ஆகியும் வருவதில்லை. பெரும்பாலும் அடுத்த வார இதழ் வரும்போதுதான் வருகிறது. இதனால் வாசகர்கள் பழைய இதழ்களை படிக்க நேரிடுகிறது. காரணம் கேட்டால் பத்திரிகை முகவர்களுக்கு மொத்தமாக நூலகத்துறை மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
இதற்குப் பதிலாக நூலகர்கள் மூலமாக இதழ்களை வாங்க நடவடிக்கை எடுத்தால் உடனே பத்திரிகைகள் வாங்க முடியும். நூலகத்துறையினர் கவனிப்பார்களா?